நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 18,000 பேருக்கு அபராதம்!

தில்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், செப்டம்பர் 15ம் தேதி வரை 18 ஆயிரம் நபர்களுக்கு அபராதம் செலுத்துமாறு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :8 அக்டோபர் 2024, 11:50 am

புதுதில்லி: தில்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், செப்டம்பர் 15ம் தேதி வரை 18 ஆயிரம் நபர்களுக்கு அபராதம் செலுத்துமாறு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வரை சுமார் 18,478 அபராத சலான்களை போலீஸார் வழங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2023ல் சுமார் 16,235 ஆக இருந்ததாகவும் அதுவே 2022ல் 2,320 ஆகவும் இருந்துள்ளது.

மேற்கு மாவட்டத்தில் 1973 பேர்களுக்கும், தென்கிழக்கு மாவட்டத்தில் 1902 பேர்களுக்கும், மத்திய தில்லியில் 1752 பேர்களுக்கும், தெற்கு தில்லியில் 1733 பேர்களுக்கும், வடக்கு தில்லி 1731 பேர்களுக்கும், வடக்கு (புறநகர்) தில்லி 1384 பேர்களுக்கும், ஷாஹ்தாரா மாவட்டத்தில் 540 நபர்களுக்கும் அதே வேளையில் கிழக்கு தில்லியில் 1382 பேர்களுக்கு விதிமீறல் அபராத சலான்கள் வழங்கப்பட்டது.

குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என போலீஸார் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஓட்டுநரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சாலைகளில் பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.