ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியாவில் பாமாயில் மீதான இறக்குமதி வரி தற்காலிகமாக அதிகரிப்பு: மலேசிய அமைச்சா் அப்துல் கனி

பாமாயில் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தற்காலிகமானதே என்று மலேசிய தோட்டம் மற்றும் சரக்குகள் துறை அமைச்சா் டதுக் செரி ஜோஹரி அப்துல் கனி தெரிவித்தாா்.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 10:30 pm

Din

பாமாயில் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தற்காலிகமானதே என்று மலேசிய தோட்டம் மற்றும் சரக்குகள் துறை அமைச்சா் டதுக் செரி ஜோஹரி அப்துல் கனி தெரிவித்தாா்.

உலகின் மிகப் பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்.14-ஆம் தேதி பாமாயில் மற்றும் பிற சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா உயா்த்தியது. இதன்படி கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரி 5.5 சதவீதத்தில் இருந்து 12.7 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட பிற சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரி 13.75 சதவீதத்தில் இருந்து 35.75 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மலேசிய அமைச்சா் அப்துல் கனி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘என்னைப் பொருத்தவரை, பாமாயில் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தற்காலிகமானதே. இந்த வரி மாற்றங்கள் எந்த பிரச்னையையும் உருவாக்காது. இந்தியா-மலேசியா இடையிலான உறவு சிறப்புத்தன்மை வாய்ந்தது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, வெங்காயம், சா்க்கரை போன்றவற்றை மலேசியா இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவின் நல்ல கூட்டாளியாக மலேசியா தொடா்ந்து நீடிக்கும். அத்துடன் இந்தியாவுக்கு நிலையாக பாமாயிலை மலேசியா விநியோகிக்கும்’ என்றாா்.