‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அசாம் சிறையில் 5 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தது..

News image

ராஜஸ்தான் சிறையில் 16 கைதிகள் தப்பியோட்டம்

Updated On :11 அக்டோபர் 2024, 11:06 am

ஐஏஎன்எஸ்

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்ட சிறையிலிருந்து விசாரணைக் கைதிகள் ஐந்து பேர் தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோரிகான் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஐந்து பேரும் இன்று காலை தப்பியுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில்,

கைதிகள் 5 பேரும் அடைக்கப்பட்டிருந்த அறையின் இருத்மபு கம்பிகளை உடைத்து வெளியேறியுள்ளனர். பின்னர் படுக்கை விரிப்புகள், போர்வைகளைக் கயிறாகத் திரித்து அதன்மூலம் 29 அடி உயரச் சுவரில் ஏறி குதித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 பேரையும் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.