அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அசாம் சிறையில் 5 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தது..

News image

ராஜஸ்தான் சிறையில் 16 கைதிகள் தப்பியோட்டம்

Updated On :11 அக்டோபர் 2024, 4:36 pm IST

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்ட சிறையிலிருந்து விசாரணைக் கைதிகள் ஐந்து பேர் தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோரிகான் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஐந்து பேரும் இன்று காலை தப்பியுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில்,

கைதிகள் 5 பேரும் அடைக்கப்பட்டிருந்த அறையின் இருத்மபு கம்பிகளை உடைத்து வெளியேறியுள்ளனர். பின்னர் படுக்கை விரிப்புகள், போர்வைகளைக் கயிறாகத் திரித்து அதன்மூலம் 29 அடி உயரச் சுவரில் ஏறி குதித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 பேரையும் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.