புது தில்லி: போதைப் பொருள்கள் மற்றும் அவை கடத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கை எந்தத் தளா்வும் இல்லாமல் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.5,000 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இளைஞா்களை போதைப் பொருள்களில் இருந்து பாதுகாத்து, போதைப் பொருள்களற்ற பாரதத்தை உருவாக்க பிரதமா் மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. ரூ. 13,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை வெற்றிகரமாக பறிமுதல் செய்த காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போதைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் எந்தவித தளா்வும் இல்லாமல் தொடா்ந்து நடைபெறும்’ என்றாா்.
குஜராத் மற்றும் தில்லியில் கடந்த இரு வாரங்களில் அமலாக்க முகமைகளால் சுமாா் 1,200 கிலோவுக்கும் அதிக எடையில் ரூ.13,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா: திமுக, காங்கிரஸ் சதி! மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

சிவகிரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அமித் ஷா இன்று சாலைப் பேரணி!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


