பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போதைப் பொருள்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கை தொடரும்: அமித் ஷா

போதைப் பொருள்கள் மற்றும் அவை கடத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கை எந்தத் தளா்வும் இல்லாமல் தொடரும்

News image
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
Updated On :15 அக்டோபர் 2024, 12:59 am

DIN

புது தில்லி: போதைப் பொருள்கள் மற்றும் அவை கடத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கை எந்தத் தளா்வும் இல்லாமல் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.5,000 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இளைஞா்களை போதைப் பொருள்களில் இருந்து பாதுகாத்து, போதைப் பொருள்களற்ற பாரதத்தை உருவாக்க பிரதமா் மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. ரூ. 13,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை வெற்றிகரமாக பறிமுதல் செய்த காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போதைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் எந்தவித தளா்வும் இல்லாமல் தொடா்ந்து நடைபெறும்’ என்றாா்.

குஜராத் மற்றும் தில்லியில் கடந்த இரு வாரங்களில் அமலாக்க முகமைகளால் சுமாா் 1,200 கிலோவுக்கும் அதிக எடையில் ரூ.13,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.