சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி!

கால்வாயில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

News image

கோப்புப்படம்

Updated On :16 அக்டோபர் 2024, 3:35 pm

DIN

தெலங்கானாவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.

தெலங்கானாவின் மேடக் மாவட்டத்திலுள்ள சிவம்பேட் மண்டல் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தங்கள் உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு செல்வதற்காக காரில் பயணித்துள்ளனர். இந்த நிலையில், திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், சிவம்பேட் மண்டல் பகுதியருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதியதுடன், அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் மூழ்கியது.

இந்த கோர விபத்தில், காரில் இருந்த 3 சிறுமிகள் உள்பட மொத்தம் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காரிலிருந்து இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்களும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, காயமடைந்தோருக்கு தேவைப்படும் சிகிச்சையளிக்க உரிய நடவடிகைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.