ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!

பாலிவுட் நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

News image
தமன்னா பாட்டியா - (கோப்புப்படம்)
Updated On :17 அக்டோபர் 2024, 4:57 pm

DIN

நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் குவாஹாட்டியில் உள்ள அமலாக்க இயக்குநரகம் வியாழக்கிழமை சம்மன் அனுப்பியது.

இந்தச் செயலியை விளம்பரப்படுத்துவதற்காக இன்னும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறையின் முன் ஆஜராவதற்காக அவர் தனது தாயுடன் குவாஹாட்டிக்குச் சென்றார். 

தமன்னா பாட்டியா, அவரது பெற்றோருடன் பிற்பகல் 1:25 மணியளவில் அமலாக்கத்துறை இயக்குநகர அலுவலகத்திற்கு வந்தார்.

ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.