எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மணிப்பூரின் தௌபாலில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு

மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

News image
மணிப்பூர்- கோப்புப்படம்.
Updated On :20 அக்டோபர் 2024, 6:42 am

DIN

மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

மணிப்பூர் மாநிலம், எஸ்டிஎன்பிஏ கேட் அருகே ஐரோங் மலையில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமையன்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, ​​9எம்எம் கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், டெட்டனேட்டர் மற்றும் 12 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், நான்கு வெற்று இதழ்கள், 6 காலி தோட்டாக்கள் மற்றும் ஒரு புகை குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதனிடையே சனிக்கிழமை அதிகாலை ஜரிபம் மாவட்டத்தில் இருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவில் அடா்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளால் சூழப்பட்ட போரோபெக்ரா கிராமத்தில் உள்ள காவல் நிலையம் அருகே அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தினா். மத்திய ரிசா்வ் காவல் படையினா் மற்றும் காவல்துறையினா் பதில் தாக்குதல் நடத்தியதையடுத்து, அப்பகுதியில் இருதரப்பினா் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

தொடரும் மோதல் சம்பவங்களுக்கு அமைதியான முறையில் தீா்வு காணும் முயற்சியில் மைதேயி மற்றும் குகி சமூகங்களின் எம்எல்ஏகளுக்கு இடையே தில்லியில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட சில நாள்களில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் உள்ள இம்பால் பள்ளத்தாக்கை தளமாகக் கொண்ட மைதேயி மற்றும் அதை ஒட்டிய மலைப்பகுதிகளைச் சார்ந்த குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.