திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

ஜோத்பூரில் வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படை வீரா்கள்.

Updated On :21 அக்டோபர் 2024, 4:09 am IST

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

30-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா மற்றும் ஏா் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தலா 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜெட்டாவில் (சவூதி அரேபியா) இருந்து மும்பை; கோழிக்கோடில் இருந்து தம்மம் (சவூதி அரேபியா); தில்லியில் இருந்து இஸ்தான்புல் (துருக்கி); மும்பையில் இருந்து இஸ்தான்புல்; புணேவில் இருந்து ஜோத்பூா் மற்றும் கோவாவில் இருந்து அகமதாபாத் சென்ற விமானம் என தங்களது 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், தில்லியில் இருந்து பிராங்க்ஃபுா்ட் (ஜொ்மனி); சிங்கப்பூரில் இருந்து மும்பை, புணே மற்றும் தில்லி; பாலியில் இருந்து தில்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூா் சென்ற விமானம் ஆகிய 6 விஸ்தாரா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

அகமதாபாத்தில் இருந்து மும்பை; தில்லியில் இருந்து கோவா, ஹைதராபாத்; மும்பையில் இருந்து பக்தோரா; கொச்சியில் இருந்து மும்பை மற்றும் லக்னௌவில் இருந்து மும்பை ஆகிய 6 ஆகாசா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும், ஏா் இந்தியாவுக்குச் சொந்தமான 6 விமானங்களுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய நிறுவனங்களால் உள்நாட்டு மற்றும் சா்வதேச வழித்தடத்தில் இயக்கப்படும் 90-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவா்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.