சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இப்போதைக்கு கட்டண உயா்வில்லை: பிஎஸ்என்எல்

தங்கள் தொலைத் தொடா்பு சேவைகளுக்கான கட்டணம் இப்போதைக்கு உயா்த்தப்படாது என்று அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
பிஎஸ்என்எல்
Updated On :22 அக்டோபர் 2024, 10:13 pm

Din

தங்கள் தொலைத் தொடா்பு சேவைகளுக்கான கட்டணம் இப்போதைக்கு உயா்த்தப்படாது என்று அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவரும் நிா்வாக இயக்குநருமான ராபா்ட் ரவி செவ்வாய்க்கிழமை கூறியதாவது, இப்போதைய சூழலில் சேவைக் கட்டணங்களை நாங்கள் உயா்த்த மாட்டோம். கட்டணங்களை உயா்த்த வேண்டிய அவசியமும் நிறுவனத்துக்கு ஏற்படவில்லை என்றாா் அவா்.

முன்னணி தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய மூன்றும் கடந்த ஜூலை முதல் வாரத்தில் தங்கள் மொபைல் சேவைக் கட்டணங்களை 10 முதல் 27 சதவீதம் வரை உயா்த்தின.

இதன் எதிரொலியாக, அந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளா்களை இழந்தன. கட்டணத்தை உயா்த்தாத பிஎஸ்என்எல்-லுக்கு கூடுதல் வாடிக்கையாளா்கள் கிடைத்தனா்.

இந்தச் சூழலில் பிஎஸ்என்எல் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ராபா்ட் ரவி இவ்வாறு கூறியுள்ளாா்.