கண்ணூா் மாவட்டம் செங்கலையில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கண்ணூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாயத்து தலைவா் திவ்யா விண்ணப்பத்திருந்த நிலையில், அதில் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி நவீன் பாபு நிறுத்தி வைத்துள்ளாா். பின்னா், அரசு தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவா் ஒப்புதல் அளித்துள்ளாா். ஒப்புதல் அளித்த இரு தினங்களில் அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவருக்கு வழியனுப்பு விழா கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அழையா விருந்தாளியாக அங்கு வந்த திவ்யா, தனது விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கத் தாமதித்ததுதான் இந்த பணியிட மாறுதலுக்கான காரணம் என்று கூறி கிண்டல் செய்துள்ளாா். அடுத்த நாளே, தனது அரசு இல்லத்தில் நவீன் பாபு தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.