ம.பி. தேசிய பூங்காவில் இரு நாள்களில் 7 யானைகள் உயிரிழப்பு- விசாரணைக்கு உத்தரவு
மத்திய பிரதேசத்தின் பந்தாவ்கா் தேசிய பூங்காவில் கடந்த இரு நாள்களில் 7 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 3 யானைகள் கடுமையான உடல் நல பாதிப்பால் உயிருக்குப் போராடி வருகின்றன.









