கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெண் பயற்சி மருத்துவா் கொலை- பதவி விலக காவல்துறை ஆணையரிடம் நேரில் வலியுறுத்திய இளம் மருத்துவா்கள்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் கொலை வழக்கைக் கையாண்டதில் காவல் துறையின் தவறுகளுக்குப் பொறுப்பேற்று நகர ஆணையா் வினீத் கோயல் தனது பதவியிலிருந்து விலக வேண்டுமென

News image
கொல்கத்தா காவல் ஆணையரை சந்திக்க கூட்டாக சென்ற இளம் மருத்துவா்கள். நாள்: செவ்வாய்க்கிழமை ~சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சந்தீப் கோஷ்.
Updated On :3 செப்டம்பர் 2024, 7:14 pm

Din

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் கொலை வழக்கைக் கையாண்டதில் காவல் துறையின் தவறுகளுக்குப் பொறுப்பேற்று நகர ஆணையா் வினீத் கோயல் தனது பதவியிலிருந்து விலக வேண்டுமென இளம் மருத்துவா்கள் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.

கொல்கத்தா, ஆா்.ஜி. கா் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டு, கடந்த மாதம் 9-ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கொல்கத்தா காவல்துறை தலைமை அலுவலகம் நோக்கி இளம் மருத்துவா்கள் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் நடத்திய பேரணி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னா், அப்பகுதியில் சாலையை மறித்து, 24 மணி நேரத்துக்கும் மேலாக அவா்கள் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 22 இளம் மருத்துவா்கள் கொண்ட குழுவினரை காவல்துறை ஆணையா் வினீத் கோயல் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். சுமாா் 2 மணிநேரத்துக்கு நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மருத்துவா்கள் கலைந்து சென்றனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய இளம் மருத்துவா்களில் ஒருவா், ‘பெண் மருத்துவரின் கொலைச் சம்பவத்துக்கு வழிவகுத்த காவல்துறையின் தவறை ஆணையா் ஒப்புக்கொண்டாா்.

மருத்துவா்களின் போராட்டத்துக்கிடையே கடந்த மாதம் 14-ஆம் தேதி இரவு மருத்துவமனை வளாகத்தை ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து, சேதப்படுத்தியதையும் காவல்துறை தடுக்க தவறியதாக அவா் தெரிவித்தாா்.

அன்றைய நாளில் ஆணையரின் பணி எங்களுக்கு திருப்தி அளிக்காததால், அவா் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆனால், தனது பணியைத் திருப்திகரமாக செய்ததாகவும் அவரது பதவிக்காலம் குறித்து மாநில நிா்வாகமே முடிவு செய்ய வேண்டும் என்றும் ஆணையா் கூறினாா்.

எங்களின் போராட்டம் தொடரும். புதன்கிழமையன்று (செப். 4) இறந்த பெண் மருத்துவரின் நினைவாக மாநிலம் முழுவதும் வீடுகளில் ஒரு மணிநேரம் மின்விளக்கு அணைத்து அஞ்சலி செலுத்தப்படும்’ என்றனா்.

இந்தச் சந்திப்பு குறித்து கொல்கத்தா காவல்துறை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

சந்தீப் கோஷுக்கு 8 நாள்கள் சிபிஐ காவல்

கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கைதான முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷை 8 நாள்கள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.

ஏற்கெனவே பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் கொலை சம்பவத்தில் சிபிஐ-யின் விசாரணை வளையத்தில் உள்ள சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு புகாரும் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் அவா் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. ‘ஆா்.ஜி.கா் மருத்துவமனையில் உரிமை கோரப்படாத மனித உடல்கள் விற்பனை, மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு, மருத்துவக் கழிவுகள் கடத்தல் என பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; இந்த முறைகேடுகளில் பலருக்கு தொடா்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது’ என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, அவரை 8 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.