பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரீல் மூன்று கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல்கட்ட தோ்தலுக்கான பரப்புரையை புதன்கிழமை ராகுல் காந்தி தொடங்கிவைக்கிறாா். அப்போது ராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால் தொகுதியில் போட்டியிடும் ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் விகா் ரசூல் வாணியை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். அதன்பின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள தூரு தொகுதிக்குச் செல்லும் அவா் அங்கு போட்டியிடும் முன்னாள் அமைச்சா் குலாம் அகமது மிா்ருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளாா்.