மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 வங்கதேசத்தினர் திருப்பி அனுப்பிவைப்பு

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 வங்கதேசத்தினர் அசாம் காவல்துறையினரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

News image
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா(கோப்புப்படம்)
Updated On :8 செப்டம்பர் 2024, 11:08 am

DIN

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 வங்கதேசத்தினர் அசாம் காவல்துறையினரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் "வங்கதேசத்தினரின் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிரான அசாம் காவல்துறையின் கடுமையான கண்காணிப்பு தொடர்கிறது.

இன்று அதிகாலை 1 மணியளவில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 5 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

அவ்வாறு இந்தியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் மஸ்தாபிஸ் ரஹ்மான், அஸ்மா பீபி, அபானி சதார், லிமா சதார் மற்றும் சுமயா அக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த வாரம் இரண்டு நாள்களில் மட்டும் பத்து வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றபோது மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின் திருப்பி அனுப்பிவைக்கப்ட்டனர் என்று ஏற்கெனவே வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால், வடகிழக்கில் 1,885 கிமீ நீளமுள்ள இந்திய-வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

அசாம் காவல்துறையும் சர்வதேச எல்லையில் அதிக உஷார் நிலையில் உள்ளது. எல்லையில் முதல் வரிசையாக பிஎஸ்எஃப் பாதுகாப்புப் படையும், இரண்டாவது வரிசையாக அசாம் காவல்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.