எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அஸ்ஸாம் முதல்வருக்கு மாஃபியாவுடன் தொடர்பு: கௌரவ் கோகோய் குற்றச்சாட்டு!

மாஃபியாவுடன் தொடர்புள்ளவர்களை விரும்பும் முதல்வர்...

News image

கௌரவ் கோகோய் - ஹிமந்த பிஸ்வ சர்மா - dps

Updated On :2 ஏப்ரல் 2026, 6:06 pm IST

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மாஃபியாக்களுடன் தொடர்புடையவர் என அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவரும், ஜோர்ஹாட் தொகுதியின் வேட்பாளருமான கௌரவ் கோகோய் விமசித்துள்ளார்.

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கர்பி ஆங்லாங்கில் செய்தியாளர்களிடம் கௌரவ் கோகோய் பேசினார்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீது நம்பிக்கை தெரிவித்தார். ஊழல், அச்சம் மற்றும் மிரட்டல் அரசியலுக்கு எதிராக ஒட்டுமொத்த அஸ்ஸாம் மக்களும் ஒன்றுபட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.

சட்டவிரோத நடவடிக்கைகளிலும், மாஃபியா கும்பல்களிலும் ஈடுபட்டுள்ளவர்களை அஸ்ஸாம் மக்கள் இனி தலைவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கல், நிலக்கரி மற்றும் மாஃபியாக்களுடன் தொடர்புள்ளவர்களை மட்டுமே ஹிமந்த பிஸ்வ சர்மா விரும்புகிறார். அவரது சொந்தக் கட்சியிலேயே கூட, மக்களுக்குச் சேவை செய்யும் தலைவர்கள் அவருடன் நீடிப்பதில்லை. அத்தகைய தலைவர்களின் தேர்தல் வாய்ப்புகளை அவர் ரத்து செய்துவிடுகிறார்.

மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் சட்டப்பேரவையைக் கைப்பற்றுவதற்காக, தற்போது ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது, அஸ்ஸாம் ஜாதிய பரிஷத், ரைஜோர் தளம், சிபிஎம், சிபிஎம்எல் மற்றும் அனைத்துக் கட்சி மலைவாழ் மக்கள் தலைவர்கள் மாநாடு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

முன்னதாக இன்று கர்பி ஆங்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவின் விவசாயம், எரிசக்தி மற்றும் தரவு சார்ந்த உரிமைகளை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிடம் தாரை வார்த்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இந்த ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கும் நிறுவனங்களுக்கும் மட்டுமே பயனளிப்பதாகவும், அதே வேளையில் இந்திய விவசாயிகள், சிறு வணிகங்கள் மற்றும் தொழில்துறையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியைக் கட்டுப்படுத்துவதாகவும், இந்தியாவின் முக்கியத் துறைகள் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Summary

Assam Congress president and candidate from Jorhat constituency in the upcoming assembly polls, Gaurav Gogoi, on Thursday hit out at Chief Minister Himanta Biswa Sarma, alleging his links with the stone, coal and areca nut mafia in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.