ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி: பாஜக

காந்தியால் சீனாவிற்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேசவோ அல்லது அறிக்கை கொடுக்கவோ முடியாது..

News image
கௌரவ் பாட்டியா
Updated On :9 செப்டம்பர் 2024, 11:00 am

பிடிஐ

இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி ஒரு கரும்புள்ளி என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கடுமையான விமர்சித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி சென்றுள்ளார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாஜக தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கௌரவ் பாட்டியா கூறுகையில்,

காங்கிரஸ் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் தனது கருத்துக்களால் இந்திய ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தக் காந்தி முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற, பகுதிநேர தலைவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..

ஆனால், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றதிலிருந்து மக்கள் பெரும் பொறுப்பை அவரது தோள்களில் சுமத்தியுள்ளனர். ஆனால், இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டிற்குச் சென்ற காந்திக்கு என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) எதிராக காந்தி கூறிய கருத்துகள் குறித்த செய்தியாளகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்தியாவில் திறன்களுக்குப் பஞ்சமில்லை என்றும், உற்பத்திக்காக தன்னை இணைத்துக் கொள்ளத் தொடங்கினால் நாடு சீனாவுடன் போட்டியிட முடியும் என்றும் ராகுல் கூறினார்.

இதற்கு காந்தியால் "சீனாவிற்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேசவோ அல்லது அறிக்கை கொடுக்கவோ முடியாது" அவர் இந்தியாவைப் பலவீனப்படுத்துகிறார். அவர் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறார். காங்கிரஸ் தனது ஆட்சியின் போது "சீனாவுடன் கட்சிக்குக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டதாகவும் பாட்டியா கூறினார்.

“இந்திய ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகள் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவு என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.