கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உ.பி. போலீஸாருக்கு சட்டம் - ஒழுங்கு கேலியாக மாறியுள்ளது: பிரியங்கா

அப்பாவிகளைச் சித்திரவதை செய்வதும், குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் அடிப்படை மந்திரமாகிவிட்டது

News image

பிரியங்கா காந்தி

Updated On :9 செப்டம்பர் 2024, 10:20 am

உத்தரப் பிரதேச காவல்துறைக்குச் சட்டம் ஒழுங்கு கேலியாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்காவின் முகநூல் பதிவில்,

ரேபரேலியில் பொது வசதி மைய நடத்துநர் ரவி சௌராசியாவிடம் ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் அவரிடமிருந்து பணப்பையைக் கொள்ளையடித்துத் தப்பியோடினர்.

ஆனால் கொள்ளையர்கள் என்ன நினைத்தார்களோ பணப்பையைச் சாலையோரம் வைத்துவிட்டு ஓடிவிட்டனர். அந்த வழியாக வந்த கூலித்தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றபோது, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை சிறையில் அடைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். ’போராட்டத்தையடுத்து வேறு காவல் நிலையத்தில் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் தொழிலாளி தீபு நல்ல குடிமகனாகத் தனது கடமையைச் செய்துள்ளார், ஆனால் போலீஸார் அவரைக் குற்றவாளியாக்கியது.

கிராம மக்களின் போராட்டத்தையடுத்தும், போதிய ஆதாரம் இல்லாததாலும் தொழிலாளி தீபுவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அப்பாவிகளைச் சித்திரவதை செய்வதும், குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் உத்தரப் பிரதேச நிர்வாகத்தின் அடிப்படை மந்திரமாகிவிட்டது என்று பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.