உத்தரப் பிரதேச காவல்துறைக்குச் சட்டம் ஒழுங்கு கேலியாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பிரியங்காவின் முகநூல் பதிவில்,
ரேபரேலியில் பொது வசதி மைய நடத்துநர் ரவி சௌராசியாவிடம் ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் அவரிடமிருந்து பணப்பையைக் கொள்ளையடித்துத் தப்பியோடினர்.
ஆனால் கொள்ளையர்கள் என்ன நினைத்தார்களோ பணப்பையைச் சாலையோரம் வைத்துவிட்டு ஓடிவிட்டனர். அந்த வழியாக வந்த கூலித்தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றபோது, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை சிறையில் அடைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். ’போராட்டத்தையடுத்து வேறு காவல் நிலையத்தில் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் தொழிலாளி தீபு நல்ல குடிமகனாகத் தனது கடமையைச் செய்துள்ளார், ஆனால் போலீஸார் அவரைக் குற்றவாளியாக்கியது.
கிராம மக்களின் போராட்டத்தையடுத்தும், போதிய ஆதாரம் இல்லாததாலும் தொழிலாளி தீபுவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அப்பாவிகளைச் சித்திரவதை செய்வதும், குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் உத்தரப் பிரதேச நிர்வாகத்தின் அடிப்படை மந்திரமாகிவிட்டது என்று பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி

உ.பி. யமுனை ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு; 22 போ் காயம்
அரசன் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! டி. ராஜேந்தர் குற்றச்சாட்டு!
பயங்கரவாத தொடா்புகள் இருப்பதாக சந்தேகம்: உ.பி. நபரை கைது செய்த தில்லி காவல்துறை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு




