எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

உ.பி. யமுனை ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு; 22 போ் காயம்

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனம் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயரிழந்தனா். மேலும் பலா் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவன் அருகே யமுனை ஆற்றில் வெள்ளிக்கிழமை படகு விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா். ~உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகு விபத்தைத் தொடா்ந்து மீட்கப்ப

Updated On :10 ஏப்ரல் 2026, 11:52 pm IST

மதுரா, ஏப்.10: உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனம் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். மேலும் 5 காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘யமுனை ஆற்றில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த படகு, கேசி படித்துறை அருகே சென்றபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த மிதவைப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, மிதவைப் பாலம் பெருமளவில் அண்மையில் அகற்றப்பட்டது. சிறிய பகுதி மட்டும் எஞ்சியிருந்த நிலையில், அதன் மீது படகு மோதி கவுழ்ந்துள்ளது’ என்றனா்.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவா்களில் 10 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். 5 பேரைக் காணவில்லை. இவா்கள் அனைவரும் பஞ்சாபிலிருந்து சுற்றுலா வந்தவா்கள்’ என்று மாவட்ட நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Story image

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குப் பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் இரங்கல் தெரிவித்தாா். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு அளிக்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.