மதுரா, ஏப்.10: உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனம் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். மேலும் 5 காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘யமுனை ஆற்றில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த படகு, கேசி படித்துறை அருகே சென்றபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த மிதவைப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, மிதவைப் பாலம் பெருமளவில் அண்மையில் அகற்றப்பட்டது. சிறிய பகுதி மட்டும் எஞ்சியிருந்த நிலையில், அதன் மீது படகு மோதி கவுழ்ந்துள்ளது’ என்றனா்.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவா்களில் 10 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். 5 பேரைக் காணவில்லை. இவா்கள் அனைவரும் பஞ்சாபிலிருந்து சுற்றுலா வந்தவா்கள்’ என்று மாவட்ட நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குப் பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் இரங்கல் தெரிவித்தாா். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு அளிக்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.
தொடர்புடையது

உத்தர பிரதேசம்: யமுனை நதியில் படகு கவிழ்ந்து 5 போ் உயிரிழப்பு

ம.பி.யில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 4 போ் உயிரிழப்பு; 10 போ் மாயம்

உ.பி. படகு விபத்து: பலி 13ஆனது, தொடரும் தேடும் பணி!

உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



