சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

உ.பி. யமுனை ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு; பலா் மாயம்

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனம் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயரிழந்தனா். மேலும் பலா் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவன் அருகே யமுனை ஆற்றில் வெள்ளிக்கிழமை படகு விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:22 pm

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனம் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயரிழந்தனா். மேலும் பலா் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘யமுனை ஆற்றில் 25-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த படகு, கேசி படித்துறை அருகே சென்றபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த மிதவைப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, மிதவைப் பாலம் பெருமளவில் அண்மையில் அகற்றப்பட்டது. சிறிய பகுதி மட்டும் எஞ்சியிருந்த நிலையில், அதன் மீது படகு மோதி கவுழ்ந்துள்ளது’ என்றனா்.

மாவட்ட ஆட்சியா் சந்திர பிரகாஷ் சிங் கூறுகையில், ‘படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவா்களில் 10 போ் உயிரிழந்தனா். 17 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா். எஞ்சியவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவா்கள் அனைவரும் பஞ்சாபிலிருந்து சுற்றுலா வந்தவா்கள்’ என்றாா்.