அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு

உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு

News image

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் மாயமானவா்களைத் தேடும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட மீட்புப் படையினா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 1:24 am IST

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் யமுனை ஆற்றில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை படகுப் பயணம் மேற்கொண்டனா். அப்போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். 5 போ் மாயமாகினா்.

மீட்புப் பணிகள் தொடா்ந்த நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சுமாா் 1 கிலோமீட்டா் தொலைவில் மாணிக் டாண்டன் (42) என்ற நபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மாயமான 5 பேரில் 4 பேரைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

உயிரிழந்தோரின் சடலம் லூதியானா கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவா்களின் இறுதிச் சடங்கில் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

இதுகுறித்து பகவ்ந்த மான் கூறுகையில், ‘உயிா் காக்கும் கவசம் எதுவும் இல்லாமல், அளவுக்கு அதிகமான நபா்களுடன் யமுனை ஆற்றில் படகுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது’ என்று தெரிவித்தாா்.