மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை: அசாம் சென்றார் ஆளுநர்!

மணிப்பூரின் கூடுதல் பொறுப்பிலிருந்த ஆச்சார்யா, அஸ்ஸாம் குவஹாட்டிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

News image
மணிப்பூரில் மாணவர்கள் கலவரம்
Updated On :11 செப்டம்பர் 2024, 11:12 am

பிடிஐ

மணிப்பூரில் நிகழ்ந்துவரும் அமைதியின்மையைத் தொடர்ந்து அந்த மாநில ஆளுநர் லக்ஷமண் பிரசாத் ஆச்சார்யா இம்பாலில் இருந்து குவஹாட்டிக்குப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிப்பூரின் கூடுதல் பொறுப்பிலிருந்தவர் ஆளுநர் லக்ஷமண் பிரசாத் ஆச்சார்யா. மாணவர்களுக்கு மத்தியில் நிகழ்ந்துவரும் தொடர் போராட்டத்தையடுத்து இன்று காலை 10 மணியளவில் மாநிலத்திலிருந்து அஸ்ஸாம் குவஹாட்டிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செவ்வாயன்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற மோதலில் 55-க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாக்குதலில் பலியான பெண்

சமீபத்தில் இனக்கலவரத்தில் ஆளில்லா விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. செவ்வாயன்று காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய இரு குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயது பெண் ஒருவர் பலியானதாக காவல் துறையினர் தெரிவித்தனர். கிராமத்திலிருந்த சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், அச்சமடைந்த மக்கள் அருகில் உள்ள காடுகளில் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து மாநிலத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, தலைநகரில் பதற்றமான பகுதிகளில் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் எதற்காகப் போராட்டம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதத்திலிருந்து, ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது.

மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும். இந்த மோதலில்

இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

முதல்வர் உறுதி

மாநிலத்தில் நடந்துவரும் இடையூறுகள் குறித்து மாணவர்கள் தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர், மேலும் அவர்களின் நிலைமையை நான் உண்மையிலேயே மதிக்கிறேன். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் கல்வியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதித்தோம்.

இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை அனைத்து மாணவர்களுக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தேர்வுகள் ஒத்திவைப்பு

மணிப்பூல் பல்கலைக்கழகத்தில் இளங்களை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.