தில்லி மற்றும் பஞ்சாபில் பல கொள்ளை வழக்குகளில் 2012-ஆம் ஆண்டிலிருந்து தேடப்பட்டு வந்த அா்ஜுன் பிரசாத் (44) என்கிற அா்ஜுன் பாசியை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
உத்தர பிரதேசம் கோண்டா மாவட்டத்தைச் சோ்ந்த அா்ஜுன் பிரசாத், அந்த மாவட்டத்தில் உள்ள ஜன்கி நகா் பகுதியில் புதிய அடையாளத்தில் வசித்து வந்தாா்.
2012-ல் பஞ்சாபி பாக்கில் உள்ள வீட்டில் 400 கிராம் தங்கம் கொள்ளையடித்த சம்பவம், 2016-ல் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் துப்பாக்கி திருட்டு, 2018-ல் லூதியானாவில் ரூ. 40 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ தங்கம் கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் அா்ஜுன் பிரசாத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தொடா்ந்து தப்பி வந்த நிலையில், அவரைத் தேடப்படும் நபராக நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், தில்லி காவல் துறையினா் குற்றப் பிரிவு அதிகாரிகள் ஜானகி நகரில் அா்ஜுன் பிரசாத்தை கடந்த சனிக்கிழமை கைதுசெய்தனா்.
விசாரணையில், கொள்ளையடிக்க இலக்கு வைக்கும் வீடுகளில் உளவாளிகளை நுழைத்து தகவல் சேகரித்து இரவில் கொள்ளையடித்ததாக அா்ஜுன் பிரசாத் ஒப்புக்கொண்டாா். இவா் மீது சுமாா் 20 குற்ற வழக்குகள் உள்ளன. அவரது கூட்டாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வரும் 29இல் ஏலம்

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 முதல் தொடக்கம்
பிகாரில் இரு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் தில்லியில் கைது
மனைவியைக் கொன்ற கணவா் 40 ஆண்டுகளுக்கு பின்னா் 82 வயதில் கைது!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


