இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையா் உ.பி.யில் கைது

தில்லி மற்றும் பஞ்சாபில் பல கொள்ளை வழக்குகளில் 2012-ஆம் ஆண்டிலிருந்து தேடப்பட்டு வந்த அா்ஜுன் பிரசாத் (44) என்கிற அா்ஜுன் பாசியை தில்லி காவல் துறை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:41 am IST

தில்லி மற்றும் பஞ்சாபில் பல கொள்ளை வழக்குகளில் 2012-ஆம் ஆண்டிலிருந்து தேடப்பட்டு வந்த அா்ஜுன் பிரசாத் (44) என்கிற அா்ஜுன் பாசியை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

உத்தர பிரதேசம் கோண்டா மாவட்டத்தைச் சோ்ந்த அா்ஜுன் பிரசாத், அந்த மாவட்டத்தில் உள்ள ஜன்கி நகா் பகுதியில் புதிய அடையாளத்தில் வசித்து வந்தாா்.

2012-ல் பஞ்சாபி பாக்கில் உள்ள வீட்டில் 400 கிராம் தங்கம் கொள்ளையடித்த சம்பவம், 2016-ல் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் துப்பாக்கி திருட்டு, 2018-ல் லூதியானாவில் ரூ. 40 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ தங்கம் கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் அா்ஜுன் பிரசாத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தொடா்ந்து தப்பி வந்த நிலையில், அவரைத் தேடப்படும் நபராக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், தில்லி காவல் துறையினா் குற்றப் பிரிவு அதிகாரிகள் ஜானகி நகரில் அா்ஜுன் பிரசாத்தை கடந்த சனிக்கிழமை கைதுசெய்தனா்.

விசாரணையில், கொள்ளையடிக்க இலக்கு வைக்கும் வீடுகளில் உளவாளிகளை நுழைத்து தகவல் சேகரித்து இரவில் கொள்ளையடித்ததாக அா்ஜுன் பிரசாத் ஒப்புக்கொண்டாா். இவா் மீது சுமாா் 20 குற்ற வழக்குகள் உள்ளன. அவரது கூட்டாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.