ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹரியாணா தேர்தல்: 6-வது பட்டியலை வெளியிட்டது ஜனதா கட்சி கூட்டணி!

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 6:39 am

பிடிஐ

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜனநாயக் ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி 13 வேட்பாளர்கள் அடங்கிய ஆறாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்ம, ஜனநாயக ஜனநாயக் ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் ஹரியாணாவில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அந்தந்த கட்சி வெளியிட்டு வருகின்றது.

அதன்படி, ஜனநாயக் ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி 13 வேட்பாளர்களை அடங்கிய ஆறாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.

13 வேட்பாளர்களில் ஏஎஸ்பி பிவானி, பகதூர்கர், மகேந்திரகர் மற்றும் பாட்ஷாபூர் ஆகிய இடங்களில் போட்டியிடும். சோனிபட்டில் உள்ள கர்கோடா பகுதியைத் தவிர, ஜேஜேபி கர்னால், பானிபட் அர்பன், நர்வானா, உக்லானா, நர்னாண்ட், லோஹாரு, நங்கல் சௌத்ரி மற்றும் பத்கல் ஆகிய இடங்களிலிருந்தும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இரு கூட்டணிக் கட்சிகளும் இதுவரை 90 இடங்களில் 77 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த வேட்பாளர்களில் 61 பேர் ஜேஜேபியைச் சேர்ந்தவர்கள். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

முன்னதாக நேற்று கூட்டணி 34 வேட்பாளர்களின் பெயர்களைத் தேர்தலுக்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 4 அன்று, 19 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.