நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கேஜரிவால் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி: ஜார்க்கண்ட் முதல்வர் சோரன்!

கேஜரிவால் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் தெரிவித்துள்ளார்.

News image

ஜார்க்கண்ட் முதல்வர் சோரனுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

Updated On :13 செப்டம்பர் 2024, 10:06 pm IST

கேஜரிவால் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் தெரிவித்துள்ளார்.

கேஜரிவாலுக்கு ஜாமீன்

கலால் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளார்.

கலால் கொள்கை ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை தொடர்ந்த ஊழல் வழக்கில் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (செப்.12) முன்ஜாமீன் வழங்கியது.

ஜார்க்கண்ட் முதல்வர் எக்ஸ் தளப் பதிவு

இதுகுறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளிட்டுள்ளப் பதிவில், “பொய்யையும், சூழ்ச்சியையும் வீழ்த்தி உண்மை வெற்றி பெற்றுள்ளது. அண்ணன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால ஜாமீன்

கடந்த மார்ச் 21 ஆம் தேதி பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இருப்பினும், அவர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் இருந்தபோது, ​​ஜூன் 26 அன்று கலால் கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பேரவைத் தேர்தல்கள்

ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல்களில் களமிறங்கவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் ஒரு பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது.

மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தில்லியில் ஆட்சியைத் தக்கவைக்கவும் ஆம் ஆத்மி தயாராகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.