சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

கேஜரிவால் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி: ஜார்க்கண்ட் முதல்வர் சோரன்!

கேஜரிவால் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் தெரிவித்துள்ளார்.

News image

ஜார்க்கண்ட் முதல்வர் சோரனுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

Updated On :13 செப்டம்பர் 2024, 10:06 pm IST

கேஜரிவால் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் தெரிவித்துள்ளார்.

கேஜரிவாலுக்கு ஜாமீன்

கலால் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளார்.

கலால் கொள்கை ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை தொடர்ந்த ஊழல் வழக்கில் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (செப்.12) முன்ஜாமீன் வழங்கியது.

ஜார்க்கண்ட் முதல்வர் எக்ஸ் தளப் பதிவு

இதுகுறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளிட்டுள்ளப் பதிவில், “பொய்யையும், சூழ்ச்சியையும் வீழ்த்தி உண்மை வெற்றி பெற்றுள்ளது. அண்ணன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால ஜாமீன்

கடந்த மார்ச் 21 ஆம் தேதி பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இருப்பினும், அவர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் இருந்தபோது, ​​ஜூன் 26 அன்று கலால் கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பேரவைத் தேர்தல்கள்

ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல்களில் களமிறங்கவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் ஒரு பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது.

மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தில்லியில் ஆட்சியைத் தக்கவைக்கவும் ஆம் ஆத்மி தயாராகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.