முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒடிசாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார் பிரதமர்!

ஒடிசா அரசின் பெண்களை மையமாகக் கொண்ட சுபத்ரா யோஜனா திட்டத்தை தொடங்கிவைத்தார்.

News image
ஒடிசாவில் பிரதமர் மோடி- -
Updated On :17 செப்டம்பர் 2024, 8:12 am

பிடிஐ

ஒடிசா அரசின் பெண்களை மையமாகக் கொண்ட சுபத்ரா யோஜனா திட்டத்தையும், மாநிலத்தில் ரூ.3,800 கோடி மதிப்பிலான ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மாநிலத்தில் 2,871 கோடி மதிப்பிலான தேசிய ரயில்வே திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஜனதா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.

சுபத்ரா திட்டத்தின் கீழ் 2024-25 முதல் 2028-29 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 21-60 வயதுக்குள்பட்ட அனைத்து தகுதியான பயனாளிகளும் ரூ.50 ஆயிரம் வரை பெறுவார்கள்.

இரண்டு தவணைகளில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் இதுவரை 76 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, ​​சுபத்ரா திட்டத்தின் கீழ் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1,250 கோடிக்கு மேல் பணம் மாற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.