தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் மாற்றத்துக்கானதாக பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 13) தெரிவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 13) கலந்துரையாடினார்.
தேர்தலுக்கு தயாராவது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பணி குறித்து நிர்வாகிகளுடன் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர், நமோ செயலியில் முன்பதிவு செய்து மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரை சேர்ந்த அஜித்குமார், திருவண்ணாமலை தெற்கு தொகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடினார்.
அப்போது தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகளை தந்தது பாஜக எனக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிற்கு பாஜக செய்ததை மற்றவர்கள் மறைத்தாலும் மாற்றத்திற்கான கூட்டணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி இருப்பதாகக் கூறினார்.
கோவை கவுண்டம்பாளையத்திற்குட்பட்ட ரம்யாவுடன் கலந்துரையாடிய மோடி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தல் பணிக்குத் தயாராவது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் முக்கியத்துவம் குறித்து மோடி கலந்துரையாடினார்.
Summary
TN Election 2026 PM Narendra modi meeting with BJP karyakarthas
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!

நெதர்லாந்து பிரதமருடன் பேசிய பிரதமா் மோடி!
புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கை

திருச்சியில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


