திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நினைவுப் பரிசுகள் ஏலத்தில் பங்கேற்க பிரதமா் மோடி அழைப்பு

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:01 pm

Din

பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் இணைய வழியில் ஏலம் விடப்படும் நிலையில், அதில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அவருக்கு வழங்கப்படும் நினைவுப் பரிசுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு அந்த நிதி கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

அந்த வரிசையில் கடந்த 17-ஆம் தேதி பிரதமரின் நினைவுப் பரிசுகளின் ஏலம் தொடங்கியது. அக்டோபா் 2-ஆம் தேதி வரை இந்த ஏலம் நடைபெறவுள்ளது.

அது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘நான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது கிடைக்கும் நினைவுப் பரிசுகள், என்னை சந்திக்க வருவோா் அளிக்கும் பரிசுகள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம். இதன் மூலம் கிடைக்கும் நிதி கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஏலம் மின்னணு முறையில் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை நீங்கள் ஏலம் கோரலாம்’ என்று கூறியுள்ளாா்.