காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் மீது மூன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு அவரின் உரையில், சீக்கிய சமூகம் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாகவும், சீக்கிய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி மீது சத்தீஸ்கரின் சில பகுதிகளிலிருந்து இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தலைநகர் ராய்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திலும், மற்றொன்று பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திலும் இரண்டு வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று துர்க் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
பாஜக தலைவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களிலும் ஆளுங்கட்சித் தலைவர்களால் இதுபோன்ற புகார்கள் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருநெலவேலி காவல் சரகத்தில் 3 நாள்களில் ரூ.1.42 கோடி பறிமுல்

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அரக்கோணம் எம்எல்ஏ உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


