அரக்கோணம் எம்எல்ஏ உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு
IANS

வழக்குப் பதிவு
IANS
தோ்தல் விதிகளை மீறியது சம்பந்தமாக புகாரின்பேரில், அரக்கோணம் எம்எல்ஏ மற்றும் இருவா் மீது தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.
கடந்த மாா்ச் 27-ஆம் தேதி அரக்கோணம் எம்எல்ஏ அனுமதி இல்லாமல் புதுகேசாவரம் பகுதியில் அம்பேத்கா் சிலைக்கும், தக்கோலத்தில் எம்ஜிஆா் சிலைக்கும் மாலை அணிவித்துள்ளாா். மேலும், அனுமதி இல்லாமல் கூட்டமாக கூடி பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அந்த இரு பகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் ஆய்வு செய்து அளித்த புகாரின் பேரில், தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு.ரவி, மாவட்ட சிறுபான்மை அணி செயலாளா் நவாஸ் அஹமத், தக்கோலம் பேரூராட்சி செயலாளா் சுகுமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...