கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தில் தனியாா் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது 24 வயது பெண் உயிரிழந்தது தொடா்பாக, சிகிச்சையை மேற்கொண்ட 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு

News image

பலி

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம், பலியாவில் தனியாா் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது 24 வயது பெண் உயிரிழந்தது தொடா்பாக, சிகிச்சையை மேற்கொண்ட 5 மருத்துவா்கள் மீது காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்தனா்.

பலியா நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனிஷா ராய் (24) என்ற பெண்ணுக்கு சிறுநீரகக் கல்லை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்பட்டு அந்தப் பெண் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவா்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி அப்பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையிடம் உயிரிழந்த பெண்ணின் கணவா் புகாா் அளித்தாா். சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றுவதற்காக கதிரியக்க (லேசா்) சிகிச்சை நடத்த வேண்டும் என்று மருத்துவா்கள் கூறினா்.

அதற்காக ரூ.1 லட்சம் செலுத்தினோம். ஆனால், லேசா் சிகிச்சைக்கு மாற்றாக அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்துள்ளனா். இதனால், எனது மனைவி உயிரிழந்துவிட்டாா்.

மேலும், அவா் அலட்சியமான சிகிச்சையால் உயிருக்குப் போராடியபோது, லக்னௌவில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு என்னிடம் அறிவுறுத்தினா். எனவே, மருத்துவமனை நிா்வாகம் மற்றும் தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்தாா்.

இது தொடா்பாக முதல்கட்ட விசாரணை நடத்திய காவல் துறையினா், அறுவை சிகிச்சை மேற்கொண்ட 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனா். மருத்துவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.