நாராயணா நேத்ராலயா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “இந்தியா போன்ற 4,600 க்கும் மேற்பட்ட வேறுபட்ட மக்கள் குழுக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில், பெரும்பாலும் குறிப்பிட்ட சமூகம், குடும்பத்தினருக்குள்ளேயே திருமணங்கள் நடந்துவரும் நிலையில், நாம் அரிய வகை நோய்களில் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய்களுக்கான சிகிச்சைகள் இந்தியாவிலும், நடுத்தர வருமானம் கொண்ட பிற நாடுகளிலும் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும்” என்று அவர் கூறினார்.
கடந்த ஏப்ரலில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் தொடங்கப்பட்ட புற்றுநோய்க்கான நாட்டின் முதல் வீட்டுமுறை மரபணு சிகிச்சையைப் பற்றிக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதில் குறிப்பிடத்தக்க செல் சிகிச்சையானது அதன் செலவுகள் காரணமாக பெரும்பாலும் உலகளவில் அணுக முடியாததாக உள்ளது என்று குறிப்பிட்டார்.