உத்தரப் பிரதேசத்தில் மகாபோதி எக்ஸ்பிரஸ் மற்றும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாகுதலில் ஈடுபட்டத்தால் பயணிகள் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தைக் கடந்த மகாபோதி எக்ஸ்பிரஸ் ரயிலிலும், பிரயாக்ராஜ் மாவட்டத்தைக் கடந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் நேற்று மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக வடக்கு மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
”மகாபோதி எக்ஸ்பிரஸ் நேற்று மாலை (செப். 23) மிர்சாபூர் மாவட்டத்தைக் கடக்கும்போது சிலர் கற்களை வீசி தாக்கினர்.
இதேபோல, நேற்று இரவு 9.45 மணியளவில் தில்லியிலிருந்து வந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் பிரயாக்ராஜ் மாவட்டத்தைக் கடக்கும் போது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இரு சம்பவங்களிலும் பயணிகள் சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு ரயில் நிலையத்தில் வைத்து முதலுதவி வழங்கப்பட்டது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை புகார் அளித்துள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடங்களில் யாரையும் காணவில்லை என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடைபெற்று வருகிறது” என ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி திரிபாதி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கோட்டை - நெல்லை ரயில் மீது கல்வீச்சு: சிறுவன் காயம்

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது

டைட்டானிக் காதல்! டிரம்ப் - எப்ஸ்டீனுக்கு சிலை வைத்து மர்ம நபர்கள் கிண்டல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


