உத்தர பிரதேசத்தில் அனைத்து உணவகங்களிலும் கடை உரிமையாளர் உள்பட அதன் பொறுப்பாளர்கள், மேலாளர்கள் ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென அம்மாநில அரசு செவ்வாய்க்கிழமையன்று அறிவுறுத்தியுள்ள நிலையில், ஹிமாசலிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள அதே நடைமுறையை இனி அதன் அண்டை மாநிலமான ஹிமாசல பிரதேசத்திலும் அமல்படுத்த ஆளும் காங்கிரஸ் அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி , உணவகங்களில் அவற்றின் உரிமையாளர்கள் பெயர்களுடன் அடையாள அட்டைகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையோர உணவகங்களுக்கும் இது பொருந்தும்.
பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகராட்சி கார்ப்பரேஷன் துறைகளுடன் நேற்று நடத்தப்பட்டுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஹிமாசல பிரதேச அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான விக்ரமாதித்ய சிங் இன்று (செப்.25) தெரிவித்துள்ளார்.
சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் விற்கப்படுவதை உறுதிசெய்யவே அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் செய்தியாளர்களுடன் இன்று பேசுகையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6-வது பாடமாக தொழில்கல்வி கட்டாயம்: புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு

சிலிண்டர் தட்டுப்பாடு! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி இல்லை!

காரைக்குடி தொழில்நகரமாக மாற வேண்டும்!

தொலைக்காட்சி விளம்பரங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: மத்திய அரசு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


