மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாசலில் மேகவெடிப்பு: ஒருவர் பலி; 70 சாலைகள் மூடல்!

சிர்மௌர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

News image
ஹிமாசலில் மேகவெடிப்பு
Updated On :26 செப்டம்பர் 2024, 8:17 am

பிடிஐ

ஹிமாசலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

மகாராஷ்டிரம், ஹிமாசலம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல பாதிப்புகள் பதிவாகி வருகின்றனர்.

இந்த நிலையில், சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பர்லோனி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மாவட்டத்தின் போண்டா உட்பிரிவின் அம்போயா பகுதியில் தண்ணீர் ஆலை இடிந்து விழுந்ததில் கடைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக சிர்மூர் துணை ஆணையர் சுமித் கிம்தா தெரிவித்தார்.

மாவட்டத்தில் மோசமான வானிலை காரணமாக தேசிய நெடுஞ்சாலை உள்பட 26 சாலைகள் இன்று மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை மாலையிலிருந்து சாலைகள் மூடப்பட்டு வருகின்றது. இதுவரை மொத்தம் 71 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யமுனா ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில், சில சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கனமழை காரணமாக போன்டா சாஹிப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று(செப்.26) தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 183 பேர் உயிரிழந்ததாகவும். 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை ரூ.1,332 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.