சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறை!

அவதூறு வழக்கில் சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதித்து மும்பை பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
sanjay raut
சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத்
Updated on
1 min read

அவதூறு வழக்கில் சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதித்து மும்பை பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் பகுதியில் பொது கழிப்பறை கட்டுவது மற்றும் பராமரிப்பதில், மகாராஷ்டிர பாஜக துணைத் தலைவர் கிரித் சோமையா மற்றும் அவரது மனைவி ரூ. 100 கோடி மோசடி செய்ததாக சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து கிரித் சோமையாவின் மனைவி மேதா கிரித் சோமையா, சஞ்சய் ரௌத் மீது மும்பை மஸ்கானில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மேதா கிரித் சோமையா மீது பொய்யான அவதூறு பரப்பியதாக, சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com