பணமோசடி வழக்கில் தெலங்கானா அமைச்சர் வீட்டில் சோதனை!
பணமோசடி வழக்கில் தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி வீட்டில் சோதனை..


பணமோசடி வழக்கில் தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி மற்றும் மகன் பி.ஹர்ஷா ரெட்டி ஆகியோரின் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அமைச்சரின் வீடு, நகரின் புறநகரில் உள்ள ஹிமாயத் சாகரில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் அவரது மகன், மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான பிற இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
ஹர்ஷா ரெட்டிக்கு சொந்தமான கட்டுமான நிறுவன வளாகத்திலும், அவர்களது சொந்த மாவட்டமான கம்மத்தில் உள்ள மற்ற இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
பதினாறு குழுவினர் இணைந்து வீடு, அலுவலகங்கள் மற்றும் பிற வளாகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
ஹர்ஷா ரெட்டி ரூ.7 கோடி மதிப்புள்ள ஏழு விலையுயர்ந்த கடிகாரங்களை வாங்கியதாக வருவாய் புலனாய்வு இயக்குனகரம்(டிஆர்ஐ) அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழங்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...