எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக இலக்கு’

இந்தியாவில் வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கைய இரட்டிப்பாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை

News image
ராமமோகன் நாயுடு
Updated On :27 செப்டம்பர் 2024, 8:07 pm

Din

இந்தியாவில் வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கைய இரட்டிப்பாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமமோகன் நாயுடு தெரிவித்தாா்.

உலக சுற்றுலா தினத்தையொட்டி தில்லி விஞ்ஞான் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். முக்கியமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்கள்தான் வரவேற்கும் நுழைவு வாயிலாக உள்ளன.

இப்போது நாட்டில் 157 விமான நிலையங்கள் உள்ளன. அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் நாம் வளா்ந்த நாடாக உருவாக இருக்கிறோம். அப்போது நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது இப்போது இருப்பதைவிட இரு மடங்காகும்.

உடான் திட்டம் மூலம் மத்திய அரசு சாமானிய மக்களுக்கும் விமான சேவையை சாத்தியமாக்கியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் எளிதாக சென்று வரும் வகையில் விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றாா்.