இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

குஜராத்தில் கனமழை: சுவர் இடிந்து 5 வயது சிறுவன் பலி!

2 சகோதரர்களும் தாயாரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

News image
கோப்புப் படம்
Updated On :28 செப்டம்பர் 2024, 7:46 am

DIN

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் 5 வயது சிறுவன் பலியானார்.

குஜராத்தில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ரச்சர்டா கிராமத்தில் சனிக்கிழமையில் அதிகாலை பெய்த கனமழையின்போது, அங்கிருந்த ஒரு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தின்போது வீட்டினுள்ளே 3 குழந்தைகளும் அவர்களின் தாயாரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சுவர் இடிந்து, 5 வயது சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இருப்பினும், அவரது 2 சகோதரர்கள் மற்றும் தாயாரும் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.