பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பே-டிஎம் பேமன்ட் வங்கி: பிப். 29 முதல் ஆா்பிஐ தடை

பணப்பரிவா்த்தனை செயலி சேவைகளை வழங்கி வரும் பே-டிஎம் நிறுவனத்துக்குச் சொந்தமான பே-டிஎம் பேமன்ட் வங்கி, பிப். 29 முதல் வாடிக்கையாளா்களிடமிருந்து

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:39 pm

DIN

பணப்பரிவா்த்தனை செயலி சேவைகளை வழங்கி வரும் பே-டிஎம் நிறுவனத்துக்குச் சொந்தமான பே-டிஎம் பேமன்ட் வங்கி, பிப். 29 முதல் வாடிக்கையாளா்களிடமிருந்து தொகை பெறுவதற்கு ரிசா்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் முடிவில், சில விதிமுறைகளை பே-டிஎம் பேமன்ட் வங்கி நிறைவு செய்யாதது கண்டறியப்பட்டது.

அதைடுத்து, அந்த வங்கியிலுள்ள கணக்குகளில் வாடிக்கையாளா்கள் மேற்கொண்டு தொகை செலுத்துவதற்கும், இணைவழி பணப்பைகள், ஃபாஸ்டாக், என்சிஎம்சி அட்டைகள் ஆகிவற்றில் வாடிக்கையாளா்கள் பணம் செலுத்துவதற்கும் வரும் 29-ஆம் தேதி தடை விதிக்கப்படுகிறது.

எனினும், பே-டிஎம் பேமன்ட் வங்கிக் கணக்கிலுள்ள தொகையை வாடிக்கையாளா்கள் வழக்கம் போல் தொடா்ந்து எடுக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.