தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரோமா ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி, 12 பேர் மாயம்!

ஹிமாசலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

News image

அரோமா தொழிற்சாலையில் தீ விபத்து

Updated On :3 பிப்ரவரி 2024, 11:17 am

DIN

ஹிமாசலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

சோலன் மாவட்டத்தில் பாடி பகுதியில் வாசனைத் திரவியம் தயாரிக்கும் அரோமா தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை 2.45-க்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக முதல்கட்ட விசாரணை தெரிய வந்தது. 12 பேர் மாயமாகியுள்ளனர். 

தீ விபத்தையடுத்து என்.ஆர்.அரோமா தொழிற்சாலையின் தலைவர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து நடைபெற்றபோது சுமார் 50 பேர் ஆலையில் பணியிலிருந்தாக கூறப்படுகிறது. 5 பேர் காயமடைந்த நிலையில், இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த தீ விபத்துக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.