ஹிமாசலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சோலன் மாவட்டத்தில் பாடி பகுதியில் வாசனைத் திரவியம் தயாரிக்கும் அரோமா தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை 2.45-க்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக முதல்கட்ட விசாரணை தெரிய வந்தது. 12 பேர் மாயமாகியுள்ளனர்.
தீ விபத்தையடுத்து என்.ஆர்.அரோமா தொழிற்சாலையின் தலைவர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து நடைபெற்றபோது சுமார் 50 பேர் ஆலையில் பணியிலிருந்தாக கூறப்படுகிறது. 5 பேர் காயமடைந்த நிலையில், இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த தீ விபத்துக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.