வட இந்தியாவில் அடுத்த 5 நாள்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும்!

வட இந்தியாவில் 5 நாள்களுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
வட இந்தியாவில் அடுத்த 5 நாள்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும்!
Published on
Updated on
1 min read


வட இந்தியாவில் 5 நாள்களுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த ஐந்து நாள்களுக்கு வட இந்தியாவில் அடர்த்தியான மற்றும் மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் தொடர்ந்து நிலவும். 

பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெற்கு ராஜஸ்தான், வடக்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3-7 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். 

வட இந்தியாவின் பல இடங்களில் இயல்பை விட (-)1 டிகிரி செல்சியஸ் முதல் (-) 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக உள்ளது. இன்று, அமிர்தசரஸில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com