உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்து வருகிறது: ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :7 பிப்ரவரி 2024, 8:49 pm IST

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) தொடங்கிய நடைப்பயணம், 67 நாள்களில் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வழியாக 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மும்பையில் வரும் மாா்ச் 20-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

ராகுல் காந்தி தற்போது நாகலாந்து மாநிலத்தில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது.

"இந்தியா கூட்டணியின் நிலை சிறப்பாக உள்ளது. நாங்கள் எங்கள் கூட்டணி கட்சிகளுடன் உரையாடி வருகிறோம். தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. அதற்கான  விவாதங்கள் நடந்து வருகின்றன. 

அவை நன்றாக செல்கிறது என்று நினைக்கிறேன். அந்த விவாதங்கள் எங்கு முடிவடைகின்றன என்பதைப் பார்க்க வேண்டும் ஆனால் சிக்கலான விவாதங்கள் அல்ல, சிறிய விவாதங்கள் தான். எனவே, அவை விரைவில் தீர்க்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.