திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியா கூட்டணிக்குப் பின்னடைவு? தனித்துப் போட்டியிட மம்தா முடிவு

மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 7:47 am

DIN


மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், புதன்கிழமை, தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியா கூட்டணியில் மிக முக்கியக் கட்சியாக அங்கும் வகித்து வந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மனக்கசப்பு வளர்ந்து இந்த நிலையை அடைந்திருப்பதாகவும், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் இணைவதாகவும் அறிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறுகையில், காங்கிரஸ் கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம், தேர்தல் முடிவுக்குப் பிறகு, அனைத்திந்திய அளவில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு தொடர்பாக யாரிடமும் எதுவும் பேசவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத நீதி நடைப்பயணம் வியாழக்கிழமை மேற்கு வங்க மாநிலத்தில் நுழையவிருக்கும் நிலையில், இதில் கொல்கத்தா தவிர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து கருத்துக் கூறிய மம்தா பானர்ஜி, அவர்கள் எனது மாநிலத்துக்கு வருகிறார்கள். ஆனால், அது பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு மரியாதை கூட தெரியவில்லை என்று மம்தா குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, செவ்வாயன்று பேசிய மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் 10 முதல் 12 மக்களவைத் தொகுதிகளைக் கேட்பது நியாயமற்றது என்று கடுமையாக விமரிசித்திருந்தார். தங்களது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மோசமான நிலைமையையும் அவர் சுட்டிக்காட்டினார். அதாவது, 2014ஆம் ஆண்டு நான்கு தொகுதிகளிலும், 2019ஆம் ஆண்டு 2 தொகுதிகளிலும்தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மேற்குவங்கத்தில் மொத்துமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களை வென்றது. பாஜக 18 இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்,  தங்கள் மாநிலத்தில் 2 தொகுதிகளைத்தான் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க மம்தா முடிவு செய்திருந்தார். ஆனால் காங்கிரஸ் தரப்பில் 10 - 12 தொகுதிகளைக் கேட்டுள்ளனர் என்று தெரிகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.