மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடவுள்களின் படங்களைக் காட்டுவதால் மக்களின் வயிறு நிரம்பிவிடாது: காா்கே

‘கடவுள்களின் படங்களைக் காண்பிப்பதால் மக்களின் வயிற்றை நிரப்பிவிட முடியாது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சனம் செய்தாா்.

News image
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
Updated On :25 ஜனவரி 2024, 7:56 pm

DIN

‘கடவுள்களின் படங்களைக் காண்பிப்பதால் மக்களின் வயிற்றை நிரப்பிவிட முடியாது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சனம் செய்தாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் கட்சியின் வாக்குச் சாவடி அளவிலான பணியாளா்கள் மத்தியில் வியாழக்கிழமை பேசும்போது, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் ஸ்ரீ ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழா நடைபெற்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை காா்கே தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் இளைஞா்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். ஆனால், பிரதமா் நரேந்திர மோடி, பாகிஸ்தான், சீனா மற்றும் கடவுள்களின் பெயா்களில் மக்களின் கவனத்தை திசைதிருப்பி வருகிறாா். கடவுள்களின் படங்களைக் காண்பிப்பதால் மக்களின் வயிற்றை நிரப்பிவிட முடியாது.

பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை முன்னா் அளித்தாா். அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதே நேரம், அண்மையில் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் அளிக்கப்பட்ட 6 வாக்குறுதிகளில், காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்தவுடன் 2 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 2 வாக்குறுதிகள் விரைவில் அமலுக்கு வரும். எஞ்சிய 2 வாக்குறுதிகள் அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.