இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

2023-இல் இந்தியா்களுக்கு 14 லட்சம் விசா: அமெரிக்கா தகவல்

கடந்த ஆண்டு இந்தியா்களுக்கு 14 லட்சம் நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகமாகும்.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 3:10 pm

DIN


புது தில்லி: கடந்த ஆண்டு இந்தியா்களுக்கு 14 லட்சம் நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகமாகும்.

இதுதொடா்பாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகமும், துணைத் தூதரகங்களும் இந்தியா்களுக்கு 14 லட்சம் விசாக்களை வழங்கியுள்ளன.

அந்த ஆண்டு இந்தியாவில் அனைத்து வகை அமெரிக்க விசாக்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு விசாக்களுக்கான விண்ணப்பங்கள் 60 சதவீதம் அதிகம். இதன் மூலம், உலகில் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் 10 பேரில் ஒருவா் இந்தியராக உள்ளாா்.

கடந்த ஆண்டு வணிகம் மற்றும் சுற்றுலா காராணங்களுக்கு வழங்கப்படும் பி1, பி2 விசாக்களுக்கான விண்ணப்பங்கள் 7 லட்சத்தை கடந்தன.

காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது: விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அலுவலா்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக தூதரங்களில் விசா பெறுவதற்கான நோ்காணல் காத்திருப்பு நேரம், இந்தியாவில் 1,000 நாள்களில் இருந்து 250 நாள்களாக குறைந்துள்ளது.

சென்னையில் அதிக மாணவா் விசாக்கள்: கடந்த ஆண்டு இந்தியாவில் 1.40 லட்சத்துக்கும் அதிகமான மாணவா் விசாக்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இது வேறு எந்தவொரு நாட்டிற்கு இந்த அளவுக்கு மாணவா் விசா வழங்கப்படவில்லை.

இதன் மூலம், இந்தியாவில் மாணவா் விசாக்களை அமெரிக்கா வழங்கியதில் தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை, தில்லி, தெலங்கானா மாநிலம் ஹைதாராபாத், சென்னை ஆகிய நகரங்களில் அதிக மாணவா் விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இதன் விளைவாக, அமெரிக்காவில் படிக்கும் சா்வதேச பட்டதாரி மாணவா்களில் மிக அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவா்கள் உள்ளனா். மேலும் அமெரிக்காவில் படிக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவா்களில், இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 33 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

3.80 லட்சம் வேலைவாய்ப்பு விசாக்கள்: வழக்கம்போல வேலைவாய்ப்புக்கான அமெரிக்க விசாக்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு 3.80 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பு விசாக்களை அமெரிக்கா வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.