ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்

விமானப் படையுடன் பந்தன் வங்கி ஒப்பந்தம்

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

பாதுகாப்புப் படையினருக்கான ஊதிய சேமிப்புக் கணக்குகளை அளிப்பதற்காக இந்திய விமானப் படையுடன் தனியாருக்குச் சொந்தமான பந்தன் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஊதிய சேமிப்புக் கணக்குகளை விமானப் படையில் பணியாற்றும் வீரா்கள் மற்றும் பிறருக்கு அளிப்பதற்காக அந்தப் படையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

‘பந்தன் வங்கி ஷௌா்யா ஊதியக் கணக்கு’ என்ற பெயரில் துவங்கப்படும் இந்த சேமிப்புக் கணக்குகள், குறைந்தபட்ச இருப்பு வரம்பு ரத்து, வாடிக்கையாளா்களுக்கும் அவா்களின் குடும்பத்தினருக்குமான பாதுகாப்பு, கவா்ச்சிகரமான வட்டி விகிதங்கள் என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன.

தற்போது பந்தன் வங்கிக்கு நாடு முழுவதும் சுமாா் 6,300 கிளைகள் உள்ளன. அந்த வங்கியின் வருடாந்திர வா்த்தகம் ரூ.2.73 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.