கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

அதிஷி, சஞ்சய் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: தில்லி நீதிமன்றம்!

காங்கிரஸ் தலைவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

தில்லி நீதிமன்றம்

Updated On :3 ஏப்ரல் 2025, 4:00 pm IST

முன்னாள் முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி தலைவர்கள் இருவரும் வேண்டுமென்றே தீட்சித்தின் நல்லெண்ணத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் மனுத் தாக்கல் செய்தார்.

மேலும், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அதிஷி, சிங் ஆகிய இருவரும் சந்தீப் தீட்சித் "பாஜகவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடிக்கக் காங்கிரஸ் ஆளும் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது என்று குற்றம் சாட்டினர் என்று புகார் கூறப்பட்டது.

சந்தீப் தீட்சித் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகார் தில்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தீப் தீட்சித் அளித்த புகாரை கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி பராஸ் தலால் விசாரிக்க மறுத்துவிட்டார்.

புகார்தாரரை அவதூறு செய்யும் வகையில் எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை என்று கருதுவதாகவும், இந்த நீதிமன்றம் விசாரணையை ஏற்க மறுக்கிறது என்றும் அவர் கூறினார். ‘

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.