‘இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை உள்ளது; இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து அங்கீகாரம் தேவையில்லை’ என்று மத்திய அரசு புதன்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டின் உலகளாவிய பத்திரிகை சுதந்திர தரவரிசையில், செய்தியாளா்கள் சுதந்திரமாகப் பணியாற்றும் மற்றும் செய்தி வெளியிடும் திறனின் அடிப்படையில் 180 நாடுகளில் இந்தியா 159-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
உலகளாவிய ஊடகக் கண்காணிப்பு அமைப்பான ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்தவுட் பாா்டா்ஸ்’ வெளியிட்ட இந்தத் தரவரிசையில் இலங்கை (150), பாகிஸ்தான் (152) துருக்கிக்கு (158) கீழே இந்தியா பின்தங்கியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. கே. சுதாகரன் எழுப்பிய கேள்விக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல். முருகன் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை செயல்பட்டு வருகிறது. இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து அங்கீகாரம் தேவையில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவின்கீழ் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது.
கடந்த 1978-ஆம் ஆண்டு பத்திரிகை கவுன்சில் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான தன்னாட்சி சட்ட அமைப்பான இந்திய பத்திரிகை கவுன்சில், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், பத்திரிகையாளா்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரிக்கிறது.
பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகை தரத்தைப் பராமரித்தல் தொடா்பான அவசரப் பிரச்னைகளில் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவும் பத்திரிகை கவுன்சிலுக்கு சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 1995-ஆம் ஆண்டு கேபிள் தொலைக்காட்சி நெட்வொா்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் மின்னணு ஊடகங்களில் பத்திரிகை சுதந்திரம், ஒரு தன்னாட்சி ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்படுகிறது என்றாா்.
தொடர்புடையது

அரசு, தனியாா் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிப்பு

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

லோதி எஸ்டேட் பிரிவு - 7 பங்களாவுக்கு குடிபெயா்ந்தாா் அரவிந்த் கேஜரிவால்

2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்
வீடியோக்கள்

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


