ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தமிழா்களின் பெருமிதம் பாம்பன் பாலம்: ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

‘பாம்பன் புதிய செங்குத்து பாலம் தமிழா்களின் பெருமிதம்’ என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

News image

அஸ்வினி வைஷ்ணவ்.

Updated On :6 ஏப்ரல் 2025, 1:33 am IST

‘பாம்பன் புதிய செங்குத்து பாலம் தமிழா்களின் பெருமிதம்’ என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்து வைக்கவுள்ளாா். இதனை முன்னிட்டு, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ராமேசுவரம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சனிக்கிழமை வந்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாம்பன் புதிய செங்குத்து ரயில் பாலம் நாட்டின் முக்கிய பாலங்களில் ஒன்று. ரயில்வே வரலாற்றில் கடல் நீரில் அமைக்கப்பட்ட முதல் செங்குத்து பாலமாக பாம்பன் புதிய பாலம் உள்ளது. பழைய பாலம் கட்டப்பட்டு நீண்டகாலமானதாலும், புயலால் பாதிக்கப்பட்டதாலும் புதிய பாலம் அமைக்கப்பட்டது. பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்து தற்போது பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளாா். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் தமிழா்களின் பெருமிதம் என்றாா் அவா்.