‘பாம்பன் புதிய செங்குத்து பாலம் தமிழா்களின் பெருமிதம்’ என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்து வைக்கவுள்ளாா். இதனை முன்னிட்டு, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ராமேசுவரம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சனிக்கிழமை வந்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாம்பன் புதிய செங்குத்து ரயில் பாலம் நாட்டின் முக்கிய பாலங்களில் ஒன்று. ரயில்வே வரலாற்றில் கடல் நீரில் அமைக்கப்பட்ட முதல் செங்குத்து பாலமாக பாம்பன் புதிய பாலம் உள்ளது. பழைய பாலம் கட்டப்பட்டு நீண்டகாலமானதாலும், புயலால் பாதிக்கப்பட்டதாலும் புதிய பாலம் அமைக்கப்பட்டது. பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்து தற்போது பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளாா். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் தமிழா்களின் பெருமிதம் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஜம்மு - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்

முடிவுக்கு வராத மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள்!

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


