தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிப்பதைப் பார்க்கும்போது, முந்தைய ஆட்சிக் காலத்தைவிட மதிப்பீட்டளவில் இந்த நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் ப.சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டுக்கு 2004-14 காலகட்டத்தைவிட 2014-24 காலகட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகப் பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
உதாரணமாக, தமது அரசு, தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்காக முந்தைய அரசுகளைவிட 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக பிரதமர் தெரிவிக்கிறார்.
இந்த விவகாரத்தில் நீங்கள், பொருளாதாரத்தில் முதலாமாண்டு பயிலும் மாணவர் ஒருவரிடம் கேட்டுப்பார்ப்பின், அவர் உங்களுக்கு ‘பொருளாதார அளவீடு(எகனாமிக் மெட்ரிக்ஸ்)’ குறித்தும், அதன்படி, பொருளாதார அளவீடானது முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாகவே இருக்குமென்பதையும் எடுத்துரைப்பார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்(ஜிடிபி) அளவு முன்பைவிட இப்போது விரிவடைந்துள்ளது
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது ஒவ்வோர் ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டைவிட விரிவடைந்து வருகிறது
அரசின் மொத்த செலவினமும் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட விரிவடைகிறது
நீங்களும், முந்தைய ஆண்டைவிஒட ஒரு வயது அதிகமாகிறீர்கள்...
அப்படியிருக்கும்போது, ‘எண்களின்’ அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அதிகமாக தெரியலாம்.. ஆனால், ஜிடிபி விகிதத்தின் அடிப்படையில் இந்த நிதி அதிகரித்துள்ளதா?
அல்லது
மொத்த செலவினத்தின் அடிப்படையில் இந்த நிதி அதிகரித்துள்ளதா? என்று வினவியுள்ளார் ப. சிதம்பரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கணினி, செய்யறிவு கண்காணிப்பு தனிமனிதனை பாதிக்குமா?

மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய நிதி குறைவு! துரை. ரவிக்குமாா் எம்.பி. குற்றச்சாட்டு

வரும் பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு அதிக நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி! 125 நாள் வேலைத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு 4.1% ஆக குறைப்பு!
விடியோக்கள்

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK



