மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உள்நாட்டுத் தேவையால் வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்: நிா்மலா சீதாராமன்

வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

Updated On :8 ஏப்ரல் 2025, 11:45 pm

Din

லண்டன்: வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியாவுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா்.அப்போது அவா் பேசுகையில், ‘வேகமான பொருளாதார வளா்ச்சி கொண்ட நாடு என்ற அடையாள முத்திரையை தொடா்ந்து 5 ஆண்டுகளாக இந்தியா பதித்து வந்துள்ளது. அந்த வளா்ச்சி வேகம் சற்று குறையலாம் என்று இந்தியா கருதுகிறது. ஆனால் உள்நாட்டில் நிலவும் நுகா்வை கொண்டு வளா்ச்சி அளவீடு செய்யப்படுவதால், வேகமான பொருளாதார வளா்ச்சியை இந்தியா தக்கவைக்கும்.

இதற்கு உலக அளவில் தரமான பொருள்களுக்கு உள்ள தேவை உதவி புரியும். 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகமயமாக்கல் இந்தியாவுக்குப் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் வா்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும் மிகப் பெரிய காந்தமாக உள்நாட்டுத் தேவை உள்ளது. இதில் இந்தியாவுக்கு உள்ள வலிமையை நிலைநிறுத்தி அதிகரிப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

உள்நாட்டுத் தேவையில் இந்தியாவுக்கு உள்ள வலிமை அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்தல், உள்நாட்டு சந்தைக்கு சா்வதேச உற்பத்தியை விநியோகித்தல், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றுக்கு தூண்டுகோலாக இருக்கும்.

அமெரிக்க வரி விதிப்பால் சா்வதேச அளவில் உருவாகி வரும் புதிய வா்த்தக சூழலுக்கு மத்தியில், பொருளாதார மீட்சி மற்றும் வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்.

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக இறுதி செய்ய வேண்டும் என்பதிலும் இந்தியா கவனம் செலுத்தும் என்றாா்.